அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் மூதறிஞர் ராஜாஜியின் சிறப்பு புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

மூதறிஞர் ராஜாஜியின் புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் தமிழ்நாடு அரசின் செய்தி, மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் மூதறிஞர் ராஜாஜி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஜனவரி 1ம் தேதி வரை சிறப்பு புகைப்பட கண்காட்சி நடைபெற இருக்கிறது. நேற்றைய தினம் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தாமோ அன்பரசன் உள்ளிட்டோர் இந்த கண்காட்சியை தொடங்கி வைத்தனர். இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராஜாஜியின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply