தேர்தல் ஆணையம் இந்தியாவின் பொதுத் தேர்தலைக் காண இதுவரை இல்லாத மிகப்பெரிய உலகளாவிய பிரதிநிதிகள் குழு வருகை.

வெளிப்படைத்தன்மையின் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும், ஜனநாயக நாடுகளிடையே உயர் தரமான தேர்தல் நடைமுறைகளுக்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதற்கும் இந்திய தேர்தல் ஆணையத்தின் பாரம்பரியத்திற்கு இணங்க, சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக 23 நாடுகளைச் சேர்ந்த 75 பிரதிநிதிகள் இந்தியாவின் பொதுத் தேர்தல்களைக் காண இந்தியா வந்துள்ளனர். புதுதில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் திரு கியானேஷ் குமார், திரு சுக்பீர் சிங் சந்து ஆகியோர் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார் பிரதிநிதிகளிடையே உரையாற்றியபோது, இந்திய தேர்தல் ஆணையத்தின் பணிகள் உலக ஜனநாயக வெளியில் குறிப்பிடத்தக்க பகுதியைக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார். அது உருவாக்கும் செயல்முறை மற்றும் திறனின் அடிப்படையில், “ஜனநாயக நடைமுறைகள் ” பரிணமிப்பதாக கூறினார்.

இந்தியத் தேர்தல் தனித்துவமானது, ஏனெனில் வாக்காளர் பதிவு கட்டாயமில்லை அல்லது வாக்களிப்பது கட்டாயமில்லை என்று திரு குமார் மேலும் கூறினார். எனவே, தேர்தல் ஆணையம் முற்றிலும் வற்புறுத்தும் இடத்தில் செயல்பட வேண்டும், வாக்காளர் பட்டியலில் ஒரு பகுதியாக மாற குடிமக்களை தன்னார்வமாக அழைக்க வேண்டும், அதன் பிறகு, முறையான வாக்காளர் விழிப்புணர்வு திட்டத்தின் மூலம், அவர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் கூறினார். “செயல்முறைகளின் நம்பகத்தன்மை என்று சொல்வது இயல்பாக இருக்கும். தேர்தல்களில் வாக்குப்பதிவு சதவீதம் மற்றும் வாக்காளர் எண்ணிக்கை விகிதாச்சாரத்தின் அடிப்படையில் வாக்காளர் பட்டியல்களின் செறிவூட்டல் ஆகியவற்றின் மூலம் நாங்கள் சரிபார்க்கிறோம் ” என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் தேர்தல் நடைமுறையின் அளவு குறித்து கருத்து தெரிவித்த அவர், நாடு முழுவதும் பரவியுள்ள 10 லட்சத்துக்கும் அதிகமான வாக்குச் சாவடிகளில் 97 கோடி வாக்காளர்களை 15 மில்லியனுக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் வரவேற்கும் என்றார். வாக்குச் சாவடிகளுக்கு வருகை தரும் பிரதிநிதிகள் மூலம் நாட்டின் வாக்காளர்களின் பன்முகத்தன்மையை அதன் முழு வெளிப்பாட்டில் காண முடியும் என்று திரு குமார் மேலும் கூறினார். இந்தியா பண்டிகைகளின் நாடு என்று கூறிய அவர், ஜனநாயகத்தின் திருவிழாவை நேரடியாக அனுபவிக்க பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் நேபாள தலைமைத் தேர்தல் ஆணையர்களுடனும் அவர்களின் பிரதிநிதிகளுடனும் தேர்தல் ஆணையம் இருதரப்பு கலந்துரையாடல்களையும் நடத்தியது.

முன்னதாக, இந்தியாவின் பொதுத் தேர்தல் 2024 இன் பல்வேறு அம்சங்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்-விவிபாட் , தகவல் தொழில்நுட்ப முன்முயற்சிகள், ஊடகங்களின் பங்கு மற்றும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. மூத்த துணைத் தேர்தல் ஆணையர் திரு. தர்மேந்திர சர்மா தலைமையில் நடைபெற்ற இந்த விளக்கக் கூட்டத்தில், துணைத் தேர்தல் ஆணையர் திரு. ஆர்.கே. குப்தாவின் தேர்தல் கண்ணோட்டமும், அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்-விவிபாட் குறித்த விளக்கக் காட்சியும் மூத்த துணைத் தேர்தல் ஆணையர் திரு. நிதேஷ் குமாரால் வழங்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தின் தகவல் தொழில்நுட்ப முன்முயற்சிகள் குறித்து ஊடகம் மற்றும் சமூக ஊடகங்களின் தலைமை இயக்குநர் திருமதி நீதா வர்மா வழங்கிய விளக்கக்காட்சி திரு. அனுஜ் சந்தக்கால் வழங்கப்பட்டது.

பிரதிநிதிகள் குழுக்களாகப் பிரிந்து மகாராஷ்டிரா, கோவா, குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களுக்குச் சென்று பல்வேறு தொகுதிகளில் தேர்தல் மற்றும் அது தொடர்பான முன்னேற்பாடுகளை பார்வையிடுவார்கள். இந்த நிகழ்ச்சி 2024 மே 9 ஆம் தேதி முடிவடையும். இந்தத் திட்டம் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு இந்தியாவின் தேர்தல் முறையின் நுணுக்கங்களையும், இந்தியத் தேர்தலில் சிறந்த நடைமுறைகளையும் அறிமுகப்படுத்தும்.

இந்த ஆண்டு, நடந்து கொண்டிருக்கும் மக்களவைத் தேர்தல் 2024ன் அளவு மற்றும் அந்தஸ்துக்கு ஏற்ப, பூட்டான், மங்கோலியா, ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், ஃபிஜி, கிர்கிஸ் குடியரசு, ரஷ்யா, மால்டோவா, துனிசியா, செஷெல்ஸ், கம்போடியா, நேபாளம், பிலிப்பைன்ஸ், இலங்கை, ஜிம்பாப்வே, பங்களாதேஷ், கஜகஸ்தான், ஜார்ஜியா, சிலி, உஸ்பெகிஸ்தான், மாலத்தீவுகள், பப்புவா நியூ கினியா மற்றும் நமீபியா ஆகிய 23 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு தேர்தல் மேலாண்மை அமைப்புகள் மற்றும் அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப்பெரிய தூதுக்குழு இந்த நிகழ்வில் பங்கேற்கிறது. தேர்தல் அமைப்புகளுக்கான சர்வதேச அறக்கட்டளையின் உறுப்பினர்கள், பூட்டான் மற்றும் இஸ்ரேலைச் சேர்ந்த ஊடகக் குழுக்களும் பங்கேற்கின்றன.

திவாஹர்

Leave a Reply