ஐ.ஆர்.இ.டி.ஏவின் 16-வது பங்குதாரர்கள் மாநாடு.

இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை லிமிடெட் (ஐ.ஆர்.இ.டி.ஏ)  தனது 16-வது பங்குதாரர்களின் கலந்துரையாடல் கூட்டத்தை புதுதில்லியில் உள்ள இந்தியா சர்வதேச மையத்தில் இன்று, (மே 4, 2024) ஏற்பாடு செய்தது. சூரியசக்தி, காற்று, நீர்வளம், உயிரி எரிசக்தி மற்றும் புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளை உள்ளடக்கிய வணிக கூட்டாளிகள் இந்த பங்குதாரர்களின் மாநாட்டில் உற்சாகமான பங்கேற்பைக் கண்டனர்.

இந்த நிகழ்வில் ஐ.ஆர்.இ.டி.ஏவின் சமீபத்திய சாதனைகளை முன்னிலைப்படுத்தும், நிதியாண்டு 2023-24 இல் அதன் வரலாற்று வருடாந்திர செயல்திறனை வலியுறுத்தும் விளக்கக்காட்சி இடம்பெற்றது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட்ட முக்கிய முன்முயற்சிகள், முந்தைய கலந்துரையாடல் கூட்டங்களின் பரிந்துரைகளை செயல்படுத்துதல் மற்றும் இந்திய அரசு நிர்ணயித்த இலக்குகளுக்கு ஏற்ப எதிர்காலத் திட்டங்கள் ஆகியவை இந்த விவாதத்தில் விவாதிக்கப்பட்டன.

இந்த சந்திப்பு குறிப்பிடத்தக்க நிதி சாதனைகளை எடுத்துக்காட்டுகிறது, மார்ச் 31, 2024 நிலவரப்படி ஐ.ஆர்.இ.டி.ஏ.வின் முதல் நிலை மூலதனம் ரூ. 8,265.20 கோடியை எட்டியுள்ளது. இந்த கணிசமான மூலதன அடித்தளம், திட்ட நிதியளிப்பில் பெரிய வெளிப்பாட்டை செயல்படுத்துகிறது, நிறுவனம் ஒரு கடன் வாங்குபவருக்கு ரூ .2,480 கோடி மற்றும் கடன் வாங்குபவர்களின் குழுவிற்கு ரூ .4,133 கோடி வரை நிதியளிக்கும் திறன் கொண்டது. ஐ.ஆர்.இ.டி.ஏ.வின் நிகர மதிப்பு 2020-21 நிதியாண்டில் ரூ.2,995 கோடியிலிருந்து 2023-24 நிதியாண்டில் ரூ.8,559 கோடியாக குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது, இது அதன் நிதி வலிமை மற்றும் நிலைத்தன்மையை நிரூபிக்கிறது.

ஐ.ஆர்.இ.டி.ஏ.வின் நெறிப்படுத்தப்பட்ட கடன் அனுமதி செயல்முறை மற்றும் முகமற்ற பரிவர்த்தனைகளுக்காக கடன் வாங்கியவர்கள் பாராட்டினர், இது வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கான முகமையின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சமீபத்தில் “நவரத்னா” அந்தஸ்தை அடைந்ததற்காகவும், வெறும் 19 நாட்களில் தணிக்கை செய்யப்பட்ட நிதி முடிவுகளை வெளியிட்ட முதல் என்.பி.எஃப்.சி என்பதற்காகவும், ஐ.ஆர்.இ.டி.ஏ.வை பங்குதாரர்கள் பாராட்டினர்.

பங்குதாரர்களிடையே உரையாற்றிய ஐ.ஆர்.இ.டி.ஏ. தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் திரு. பிரதீப் குமார் தாஸ், எளிதாக வர்த்தகம் செய்வதற்கும் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் உதவுவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். நிலையான பெரு நிறுவன ஆளுகை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கான ஐ.ஆர்.இ.டி.ஏ.வின் உறுதிப்பாட்டை அவர்  மீண்டும் உறுதிப்படுத்தினார். இந்திய அரசால் சி.ஓ.பி 26 இல் கோடிட்டுக் காட்டப்பட்ட தொலைநோக்குடன் இணைந்து, 2030-ஆம் ஆண்டளவில் புதைபடிவம் அல்லாத ஆதாரங்களில் இருந்து 500 ஜிகாவாட் நிறுவப்பட்ட மின்சார திறன் என்ற லட்சிய இலக்கை அடைவதில் முக்கியப் பங்கு வகிப்பதை ஐ.ஆர்.இ.டி.ஏ. நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

திவாஹர்

Leave a Reply