மணலியில் உலகின் 2 வது பெரிய உயவு எண்ணெய் ஆலையின் கட்டுமானப்பணிகளை பெட்ரோலியத்துறை இணையமைச்சர் ராமேஷ்வர் தெலி பார்வையிட்டார்.

சென்னை அருகே உள்ள மணலியில் உலகின் இரண்டாவது பெரிய உயவு எண்ணெய் ஆலையின் கட்டுமானப்பணிகளை மத்திய பெட்ரோலியத்துறை இணையமைச்சர் ராமேஷ்வர் தெலி பார்வையிட்டார்.அப்போது பேசிய அவர், இந்த ஆலைப்பணிகள் திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு நிறைவுபெறும் என்று தெரிவித்தார்.

எண்ணூர் துறைமுகத்தில் நவீனப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஊPஊடு நிறுவனத்தின் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளதால், இந்தியன் ஆயிலின் உயவு எண்ணெய் ஆலை பெருமளவு பயன்பெறும் என்றார்.சுற்றுச்சூழல் அனுமதியுடனும், ஐரோப்பிய யூனியனின் தரத்திற்கு ஏற்பவும் இந்த ஆலை செயல்படும் என்று திரு ராமேஷ்வர் தெலி கூறினார்.

திவாஹர்

Leave a Reply