புதுதில்லி, அகமதாபாத் ரயில் நிலையங்கள் மற்றும் மும்பை ரயில் நிலையத்தின் சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையத்தை மறுசீரமைக்க அமைச்சரவை ஒப்புதல்.

புதுதில்லி, அகமதாபாத் ரயில்நிலையங்கள் மற்றும் மும்பை ரயில் நிலையத்தின் சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையத்தை சுமார் ரூ. 10,000 கோடி மதிப்பில் மறுசீரமைக்க வேண்டும் என்ற இந்திய ரயில்வே பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அமைச்சரவையின் இன்றைய முடிவு ரயில் நிலையங்களின் மறு சீரமைப்புக்கு புதிய வழியை ஏற்படுத்தியுள்ளது. 199 நிலையங்களில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் 47 நிலையங்களில் ஒப்பந்த புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. 32 நிலையங்களில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

திவாஹர்

Leave a Reply