முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோதி இன்றிரவு டோக்கியோ புறப்படுகிறார்.

முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோதி இன்றிரவு டோக்கியோ புறப்படுகிறார்.

இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;

“நெருங்கிய நண்பரும், இந்தியா- ஜப்பான் நட்புறவின் சிறந்த சாதனையாளராக திகழ்ந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக நான் இன்றிரவு டோக்கியோ செல்கிறேன்.”

“அனைத்து இந்தியர்களின் சார்பாக, பிரதமர் கிஷிதா மற்றும் திருமதி அபே-வுக்கு நான் இரங்கலை தெரிவிப்பேன். மறைந்த அபே  அவர்கள் எதிர்பார்த்ததுபோல், இந்திய-ஜப்பான் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த நாம் தொடர்ந்து பணியாற்றுவோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply