வாகனம் ஓட்டி பழக, பழகுனர் உரிமம் வழங்கும் முகாம் நடைப்பெற்றது.

வாகனம் ஓட்டி பழக, பழகுனர் உரிமம் வழங்கும் முகாம், சேலம் போக்குவரத்து கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் ஏற்காட்டில் இன்று நடைப்பெற்றது.

ஏற்காடு காவல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இம்முகாமில் ஏற்காட்டை சேர்ந்தவர்கள் விண்ணப்பித்தனர். சேலம் ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு பயனாளிகளுக்கு பழகுனர் உரிமங்களை வழங்கினார்.

30 நாட்கள் கழித்து இதே போல் ஏற்காட்டிலேயே முகாம் நடத்தி, வாகனம் ஓட்டும் தேர்வு நடத்தி, ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட உள்ளது. முன்னதாக சாலை விதிகளை மதிப்பது குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. 

-நவீன் குமார்.

Leave a Reply