திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட விஜயகோபாலபுரம் அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலி!- 12 பேர் காயம்.

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட விஜயகோபாலபுரம் அருகே, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 5 வயது சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பெண்கள் உட்பட 12 பேர் காயமடைந்தனர். தற்போது அவர்கள் அனைவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து பாடாலூர் காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவு (F.I.R. NO:170/2018) செய்து விசாரித்து வருகின்றனர்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply