திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே கோவில் திருவிழாவில் இருத்தரப்பினரிடையே மோதல்!- காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், பாச்சூர், திருவரங்கபட்டி, பாலையூர், கோபுரபட்டி, கடுக்காதுறை, அழிஞ்சிகரை, கோவிந்தகுடி ஆகிய எட்டுபட்டிக்கு சொந்தமான பெரியண்ணசாமி, வனத்தாயி அம்மன் மற்றும் மந்தாங்கி அம்மன் கோவில் திருவிழா கடந்த 24-04-2018 அன்று தொடக்கியது. 15 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் 28-04-2018 அன்று இரவு சுரம்குத்துதல்  எனும் நிகழ்வின் போது இருவேறு பிரிவினை சேர்ந்தவர்களிடையே ஏற்பட்ட தகராறில் 7 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து இரு தரப்பினர்களால் வாத்தலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் ஒரு தரப்பினரை சேர்ந்த 5 பேர் மட்டும் விசாரனைக்கு அழைக்கபட்டதாகவும், மறுதரப்பை சேர்ந்தவர்கள் மீது எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என ஆத்திரமடைந்த 8 ஊரை சேர்ந்த பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க கோரி இன்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.

-ஆர்.சிராசுதீன், வீ.குணசேகரன்.

Leave a Reply