ஏற்காட்டில் கூட்டுறவு சங்கம் பூட்டப்பட்டிருந்ததால், வேட்புமனு பரீசிலனைக்கு வந்தவர்கள் ஏமாற்றம்!

ஏற்காட்டில் நேற்று வேட்புமனுதாக்கல் பரிசீலனை நடத்தாததால் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்க அலுவலகம் பூட்டப்பட்டிருக்கும் காட்சி.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கூட்டுறவு சங்கம் பூட்டப்பட்டிருந்ததால், வேட்புமனு பரீசிலனைக்கு வந்த வேட்பாளர்கள் ஏமாற்றமடைந்தனர். ஏற்காடு தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தின் 9 இயக்குனர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 9ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நடத்தப்பட்டது. இதில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வை சேர்ந்தவர்கள் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

இந்த வேட்புமனுக்களின் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் அலுவலகத்திற்கு வராமல், சங்க அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. அங்கு வந்து இதை கண்ட தி.மு.க.வினர் அதிருப்தியடைந்தனர். வேட்புமனு பரிசீலனையே நடத்தாத அதிகாரிகள் தேர்தலை முறையாக நடத்துவார்களா ?

– நவீன் குமார்.

Leave a Reply