ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காரின் மீது லாரி மோதியது!-திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவிரி பாலம் அருகே விபத்து!

திருச்சிசென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று (07.02.2018) நள்ளிரவு 12.05 மணியளவில், திருச்சி காவிரி பாலம் அருகே அதிவேகமாக சென்றுக்கொண்டிருந்த கார் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைத்தடுமாறி சாலையின் குறுக்கே அங்குமிங்கும் ஓடி சாலை ஓரத்தடுப்பு தகரத்தில் மோதி நின்றது.

அந்த நேரம் அவ்வழியாக வந்த லாரி ஒன்று, அந்த கார் மீது மோதியது. அதிஷ்டவசமாக காரில் இருந்த நபர்கள் அனைவரும் உயிர் தப்பினார்கள்.

இதனால் திருச்சிசென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம்  போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை ரோந்துப் பணி காவல்துறையினர், விபத்து வாகனங்களை அப்புறப்படுத்தும்வரை போக்குவரத்தை சீர்செய்தனர்

-டாக்டர் துரைபெஞ்சமின்.

Leave a Reply