திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட வேட்டி, சேலைகள் அடங்கிய பார்சல்கள் வந்துசேர்ந்தது.
தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு வழங்குவதற்காக இலவச வேட்டி, சேலை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத்திற்கும் அனுப்பப்பட்டு வருகிறது. விரைவில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.
மேலும், பொங்கல் பொருட்களுடன் சேர்த்து, சிறப்பு பரிசாக ஒரு குடும்ப அட்டைக்கு தலா ரூ.1000 வீதம் வழங்க முதலமைச்சர் கே.பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
-ஆர்.சிராஜுதீன்
