ஐந்து நாடுகளின் தூதர்கள் தங்களது பணி நியமன ஆணைகளை குடியரசுத் தலைவரிடம் அளித்தனர் .

குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (மார்ச் 27, 2024) நடைபெற்ற விழாவில் பிலிப்பைன்ஸ், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ், கென்யா, ஜார்ஜியா ஆகிய நாடுகளின் தூதர்கள் வழங்கிய பணி நியமன ஆணைகளை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார். பணிநியமன ஆணைகளை வழங்கியவர்கள்:

1. திரு ஜோசல் பிரான்சிஸ்கோ இக்னாசியோ, பிலிப்பைன்ஸ் குடியரசின் தூதர்

2.   திரு சர்டோர் ருஸ்தம்பேவ், உஸ்பெகிஸ்தான் குடியரசின் தூதர்

3.   திரு மிகைல் காஸ்கோ, பெலாரஸ் குடியரசின் தூதர்

4.   திரு பீட்டர் மைனா முனிரி, கென்யா குடியரசின் ஹைகமிஷனர்

5.   திரு வக்தாங் ஜாஷ்விலி, ஜார்ஜியா தூதர்

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply