தருமபுரிநாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்புமனுவை பாமக சார்பாக அன்புமணி ராமதாசின் மனைவி சவுமியா அன்புமணி தாக்கல் செய்தார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் களம் பரபரப்படைந்துள்ளது. வேட்புமனு தாக்கலும் கடந்த வாரம் தொடங்கியுள்ளது. நாளை மறுதினத்தோடு வேட்புமனு தாக்கல் நிறைவடையவுள்ளது. இதனையடுத்து இன்று நல்ல நாள் என்பதால் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாமக சார்பாக அன்புமணி ராமதாசின் மனைவி சவுமியா அன்புமணி போட்டியிடவுள்ளார். இதனையடுத்து வேட்புமனு தாக்கல் செய்த திண்டிவனம் வீட்டில் இருந்து தருமபுரிக்கு சென்றார்.

எஸ்.திவ்யா

Leave a Reply