திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்புமனுவை மதிமுக வேட்பாளர் துரை வைகோ தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 20ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பிரதீப் குமாரிடம் திமுக கூட்டணி மதிமுக வேட்பாளர் துரை வைகோ வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் எம்.எல்.ஏ.க்கள் இனிகோ இருதயராஜ், பழனியாண்டி, திருச்சி மேயர் அன்பழகன், நகர செயலாளர் மதிவாணன், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லபாண்டியன், மதிமுக மகளிர் அணி செயலாளர் டாக்டர் ரொகையா, மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு ஆகியோர் உடன் இருந்தனர்.

கே‌.பி.சுகுமார்

Leave a Reply