நவம்பர் மாதத்தில் ஆண்டு வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய, ஸ்பார்ஷ் ஓய்வூதியதாரர்களுக்கு மேலும் 3 மாதங்களுக்கு ஓய்வூதியத்தை நீட்டிக்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்.

நவம்பர் மாதத்தில் ஆண்டு வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய,  ஸ்பார்ஷ் எனப்படும் பாதுகாப்புத்துறை ஓய்வூதிய நிர்வாக நடைமுறைக்கு மாறிய ஓய்வூதியதாரர்களுக்கு மேலும் 3 மாதங்களுக்கு ஓய்வூதியத்தை நீட்டிக்க வங்கிகளுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆண்டு அடையாளம், வாழ்நாள் சான்றிதழ் ஆகியவை மாதாந்திர ஓய்வூதியத்தை ஒவ்வொரு மாதமும் தடையின்றி, உரிய நேரத்தில் பெற கட்டாயம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்புத்துறையை சேர்ந்த அனைத்து ஓய்வூதியதாரர்களும் பிப்ரவரி 2023-க்குள் ஆண்டு அடையாளம்/ வாழ்நாள் சான்றிதழ் நடைமுறைகளை நிறைவு செய்து சுமூகமான ஓய்வூதிய செயல்முறைகளை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

எம்.பிரபாகரன்

Leave a Reply