யுக்ரைன் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண உலக நாடுகள் வலியுறுத்த வேண்டும்! -வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர்

யுக்ரைன் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண உலக நாடுகள் வலியுறுத்த வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ரஷ்யாவுக்கும் – யுக்ரைனுக்கும் இடையிலான பகைமை உணர்வுகளை களைந்து இயல்புநிலைக்கு கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் மூலமே அங்குள்ள நிலைமையை இயல்புநிலைக்கு கொண்டுவர முடியும் என்றும் அவர் கூறினார்.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் மூலம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் திரு. ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.

-சி.கார்த்திகேயன்.

Leave a Reply