சுரங்கப்பாதை வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய அவலம்!

திருச்சி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட உக்கடை அரியமங்கலத்தில் மேம்பாலத்திற்கு கீழே சுரங்கப்பாதை உள்ளது. இந்த வழியாகதான் அந்த பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் நடந்தும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சுரங்கப் பாதை நீண்ட நாட்களாக வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறியுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த இடத்தை நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

-கே.பி.சுகுமார்.

 

Leave a Reply