இலங்கையில் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த ஒரு பெண் உள்பட 3 பேர் கைது!

இலங்கை மன்னாரில் உள்ள உலுப்புக்குளம் பகுதியில் நேற்று (மார்ச் 01) 5.20 கிலோ எடையுள்ள ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை செய்துகொண்டிருந்த ஒரு பெண் உள்பட 3 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், போதைப் பொருள் விற்பனையாளர்கள் பயன்படுத்தி வந்த செல்போன் மற்றும் சிம் கார்டு ஆகியவற்றையும் பறிமுதல் செய்து, அதில் உள்ள தொடர்பு எண்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply