இலங்கை கிழக்கு கடல் பகுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கிழக்கு கடல் பகுதியில் எல்லை மீறி சட்ட விரோதமான மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 இந்திய மீனவர்கள் (பிப்ரவரி 09) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களிடமிருந்து படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து, அவர்களை சட்ட நடவடிக்கைக்காக திருகோணமலை உதவி கடற்தொழில் பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply