ஏற்காட்டில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் “ தேசிய வாக்காளர் தினம் ”த்தை முன்னிட்டு, ஏற்காடு வட்டாட்சியர் முருகேசன் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியை தலைமையேற்று தொடங்கி வைத்தார். இப்பேரணியில் ஏற்காடு நாசரேத் பெண்கள் மேல் நிலைப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். பள்ளியில் துவங்கிய பேரணி, காவல் நிலையம், கடை வீதி, காந்தி பூங்கா, அலங்கார ஏரி, மாண்ட்போர்ட் பள்ளி உள்ளிட்ட பகுதிகளை கடந்து மீண்டும் பள்ளியிலேயே நிறைவுபெற்றது.

பேரணியின் போது, “ வாக்கு நமது உரிமை, அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் ” உள்ளிட்ட முழக்கங்களை மாணவிகள் எழுப்பினார்கள். முன்னதாக பள்ளி வளாகத்தில், வாக்காளர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த பேரணியில் ஏற்காடு காவல் ஆய்வாளர் ஆனந்தன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர் .

– நவீன் குமார்.

Leave a Reply