விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை முதலில் நிறைவேற்றிய மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத்!

மத்திய பிரதேச மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக கமல்நாத் இன்று ( டிச.17) பதவியேற்றார். அவருக்கு மத்திய பிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதல்வராக பதவியேற்றுக்கொண்ட கமல்நாத், தலா ரூ.2 லட்சம் வரையிலான விவசாயிகளின் விவசாய கடனை தள்ளுபடி செய்து இன்று முதல் கையெழுத்திட்டார்.

-எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply