அரசு பள்ளியின் சார்பில் கஜா புயல் நிவாரண நிதி!- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் ஒப்படைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியம், மேல்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சார்பாக, பாரத சாரணர் இயக்க மாணவரகள், இளஞ்செஞ்சிலுவை சங்க மாணவிகள் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் பள்ளி மாணவர்கள் கஜா புயல் நிவாரண  நிதி திரட்டினர்.

பின்னர் கஜா புயல் நிவாரண நிதியை மேல்பென்னாத்தூர் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் ரூ.9020/- ஒப்படைத்தனர். மாவட்ட ஆட்சியர் கந்தசாமி பள்ளி சாரண மாணவர்கள் மற்றும் இளஞ் செஞ்சிலுவை சங்க மாணவிகளின் சேவையை வெகுவாக பாராட்டினார்.

இந்நிகழ்வின்போது பள்ளி ஆசிரியர் வேல்முருகன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் சரவணன் உடனிருந்தனர்.

– செங்கம் சரவணக்குமார்.

Leave a Reply