நீதிமன்றத்தையும், தமிழக காவல்துறையினரையும் கேவலமாக பேசிய ஹெச்.ராஜா மீது, திருமயம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு!

நீதிமன்றத்தையும், தமிழக காவல்துறையினரையும் கேவலமாக பேசிய பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா மீது, புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு (FIR NO:114/2018) செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக கூடுதல்,  அரசு ஊழியரின் கடமையை செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியரின் உத்தரவை மதிக்காமல் பேசுதல், பிற மதத்தினரை புண்படுத்தும் விதமாக பேசுதல், ஆபாசமாக பேசுதல் (143 ,188 ,153 (A),290, 294 (b) 353 ,505 (1 )(b )(c ),506 (I)IPC) ஆகிய பிரிவுகளின் கீழ்  வழக்கு பதிவு செய்துள்ளனர். 

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply