அமோகமாக நடைப்பெற்று வரும் ஆடிப் பெருக்கு விழா! -காவிரித் தாயை வணங்கி வழிப்பட்டு வரும் புதுமணத் தம்பதிகள் மற்றும் பொது மக்கள்.

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், சிந்தாமணி ஓடத்துறை, படித்துறை, தில்லைநாயகம் படித்துறை மற்றும் அய்யாளம்மன் படித்துறை ஆகிய இடங்களில் புதுமணத் தம்பதிகள் மற்றும் பொது மக்கள் காவிரித் தாயை வணங்கி வழிப்பட்டு வருகின்றனர்.

திருச்சி மாநகர காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மற்றும் திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தினர் சார்பில் விரிவானப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று மாலை கூட்ட நெரிசலை திருடர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி செயின் பறிப்பு, செல்போன் திருட்டு போன்ற குற்ற செயல்களில் ஈடுப்படும் ஆபத்து உள்ளது. எனவே, பொது மக்களும், காவல்துறையினரும் விழிப்பாக இருப்பது நல்லது.

-வீ.குணசேகரன்.

Leave a Reply