மாநில அளவிலான வலுதூக்கும் போட்டி ஜான் பாண்டியன் தலைமையில் ஏற்காட்டில் துவங்கியது.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில், மாநில அளவிலான வலுதூக்கும் போட்டி இன்று துவங்கியது. சப் ஜூனியர் மற்றும் மாஸ்டர் ஆகிய இரு பிரிவுகளில் நடக்கும் இப்போட்டிகள், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் தலைமையில் சேலம் வலுதூக்கும் சங்க காப்பாளர் குமார் முன்னிலையில் விழா துவங்கியது.

ஜான் பாண்டியன் மகன் லியங்கோ பாண்டியன் போட்டியை துவக்கி வைத்தார். இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சப்ஜூனியர் பிரிவில் 350 வீரர்களும், மாஸ்டர் பிரிவில் 100 வீரர்களும் கலந்துகொண்டனர். இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு இன்று பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது. இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளை சேலம் பாலமுருகன், சரவணன், ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

-நவீன் குமார்.

Leave a Reply