திருவாரூர் இனியன் படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு விடுதலை சிறுத்ததைகள் சார்பில்   ஊர்வலம்!

திருவாரூர் மாவட்டம், குடவாசலில் கடந்த 18-ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் மர்ம நபர்களால் பட்டப்பகலில் விடுதலை சிறுத்ததைகள் மாவட்ட செயலாளர் இனியன் படுகொலை செய்யப்பட்டார்.

இதை நினைவு கூறும் வகையில், ஆண்டு தோறும்  ஓகை பாலத்திலிருந்து அவரது கல்லறை அமைந்துள்ள   இடம் வரை அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று   மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவது வழக்கம்.    அதன்படி   இன்று (18.01.2018) மதியம் 12.00 மணியளவில்  ஓகை பாலத்திலிருந்து மாவட்ட செயலாளர் வடிவழகன் தலைமையில் ஒன்றிய செயலாளர் சேதுராமன், மகளிர் விடுதலை இயக்க மாவட்ட செயலாளர் தமிழோவியா மற்றும் விடுதலை சிறுத்தைகள் நன்னிலம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்நினைவு பேரணிக்கு குடவாசல் காவல்துறையினர் பாதுகாப்பு அளித்தனர்.

.மகேஸ்வரன்.

Leave a Reply