திருச்சி மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் வெறிநாய்களாக மாறியுள்ளதால் பொதுமக்கள் அச்சம்! – நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து போராட்டம்!

IMG-20180104-WA0018

IMG-20180104-WA0016திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வெறிநாய்கள் பலரை கடித்து வருவது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும்  நடவடிக்கை எடுக்காததால், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரியமங்கலம் வார்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருச்சி மாநகராட்சி 7-வது வார்டுக்கு உட்பட்ட அம்மாகுளம் பகுதியில் தெருநாய்கள் அதிக எண்ணிக்கையில் சுற்றித்திரிகிறது. அதில் சில நாய்கள் வெறிகொண்டு சாலையில் செல்லும் பலரை கடித்து விடுகிறது. இதுசம்மந்தமாக மாநகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

dogs

இந்நிலையில், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அம்மாகுளம் கிளை செயலாளர் ராமசந்திரன் தலைமையில் அப்பகுதி மக்கள் திருச்சி –தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஊர்வலமாக வந்து, அரியமங்கலத்தில் உள்ள மாநகராட்சி வார்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பின்னர் மாநகராட்சி இளநிலை உதவிபொறியாளர் ஜெயகுமாரிடம் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ள நாய்கள் அனைத்தையும் பிடிக்க வேண்டும் என்று கூறினர். அதிகாரிகளிடம் இதுக்குறித்து தகவல் சொல்லி உள்ளதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதேப்பேல் திருச்சி மாநகராட்சி 64-வது வார்டுக்கு உட்பட்ட பகவதிபுரம், 65-வது வார்டுக்கு உட்பட்ட புத்துகோவில்தெரு, சுருளிகோவில்தெரு ஆகியப்பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றி திரிகிறது. அப்படி சுற்றி திரியும் நாய்களில், சில நாய்களுக்கு வெறி பிடித்துள்ளது.

அதனால் அந்தப் பகுதியில் சாலையில் செல்பவர்களில் பலரை கடித்து வருகிறது. அதனால் தெருநாய்களை பிடிக்கும்படி அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்வில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

இதுக்குறித்து இளநிலை உதவிபொறியாளர் ஜெயகுமாரிடம் கேட்டதற்கு நாய் தொல்லை இருப்பது உண்மைதான். அதை பிடிக்கலாம் என்றால் விலங்குகள் நலவாரியம் பல்வேறு கட்டுபாடுகளை விதிக்கிறது. அதனால்தான் தெருநாய்களை பிடிக்க முடியவில்லை. இருந்தாலும் இதுக்குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன் என்று கூறினார்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply