தொழிற்சாலை உரிமையாளர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை!- திருவெறும்பூர் போலிசாரை திணறடிக்கும் திருடர்கள்.

20180102_142908 20180102_142837

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள அம்மன்நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது47) இவர் துவாக்குடிப் பகுதியில் இன்ஜினீயரிங் கம்பெனி வைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 28-ம் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு குடும்பத்துடன் சென்று வீட்டு நேற்று வீட்டிற்கு வந்துள்ளார். அப்படி வீட்டிற்கு வந்தவர் வீட்டை திறந்து பார்த்தப்போது வீட்டின் உள்ளே இருந்த பீரோ உடைக்கபட்டு பீரோவில் இருந்த துணிமணிகள் கலைந்துகிடந்துள்ளது.

பீரோவில் இருந்த 50 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு சுரேஷ்குமார் அதிர்ச்சி அடைந்தார். திருடன் எப்படி வந்திருப்பான் என்று வீட்டை சுற்றி பார்த்தப்போது, வீட்டின் பின் பகுதியில் உள்ள காமோண்ட் சுவரை தாண்டி குதித்து கிரில் கேட்டு பூட்டை உடைத்து திருடர்கள் உள்ளே வந்திருப்பது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து சுரேஷ்குமார் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply