அரசின் திட்டங்களின் மூலம் வழங்கப்படும் கடன் குறியீடுகளை வங்கிகள் விரைந்து செயல்படுத்த வேண்டும் : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எம்.ரவி குமார் பேச்சு.

DSC_3590 DSC_3587
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட முன்னோடி வங்கியாளர் சார்பில் வங்கியாளர் கல்விகடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசும் போது தெரிவித்ததாவது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வங்கிகள் அரசின் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கடன் உதவிகளை தாமதமின்றி வழங்கவேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடன் உதவி குறியீடுகளை விரைந்து முடிக்க வேண்டும். கிராம மக்கள் தங்களுடைய கணக்குகளை விரைவில் அருகிலுள்ள வங்கிகளில் துவங்கவேண்டும். மாவட்டத்திலுள்ள அனைத்து எளிய மக்களுக்கும் வங்கி கணக்கு இருக்க வேண்டும். அதனால் ஏற்படும் பயன்களை வங்கியாளர்கள் மக்களுக்கு எடுத்து கூற வேண்டும். மகளிர் சுய உதவிக்குழுக்கள், இளைஞர்கள் புதிய தொழில் துவங்க கடன் உதவி வழங்க வங்கிகள் முன்வர வேண்டும் என்று பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கே.எஸ்.பிரபாகர், ரிசர்வ் வங்கி அலுவலர் காந்தி நபார்டு வங்கி துணை மேலாளர் நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

-பி.கணேசன் @ இசக்கி.