இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேரும் விடுதலை! இந்தியத் தூதர் வொய்.கே.சின்ஹா வசம் ஒப்படைப்பு! ( படங்கள்)

tamil fishermans1 tamil fishermans2 tamil fishermans3 tamil fishermans4 tamil fishermans5

இலங்கையில் போதைப் பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கொழும்பு நீதிமன்றத்தினால், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேரும் சிறையில் இருந்து இன்று (19.11.2014) பிற்பகல் விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்கள் ஐந்து பேரும் இலங்கைக்கான இந்தியத் தூதர் வொய்.கே.சின்ஹா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் ஐந்து பேரும் இந்திய அதிகாரிகளுடன் இன்றே தமிழகம் திரும்பக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in