ஏற்காடு மலைப்பாதையில் மண் அரிப்பு! போக்குவரத்து பாதிப்பு!

ye2207P1கடந்த ஞாயிறு இரவு பெய்த மழையினால், சேலத்திலிருந்து குப்பனுர் வழியாக ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்து விட்டது. இதனால் இந்த வழியாக பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல முடியவில்லை.

கடந்த இரு நாட்களாக இந்த வழியாக பேருந்துகளும் செல்ல முடியவில்லை. இதனால் பொது மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, மலைப்பாதையை விரைந்து சரி செய்ய, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-நவீன் குமார்.