தமிழகத்தில் இதுவரை 303 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் லோக்சபா தேர்தலையொட்டி நடத்தப்பட்ட சோதனையில், 303.63 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தேர்தலில் பணப் பட்டுவாடாவை தடுக்க, பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள், வாகன சோதனை நடத்தி வருகின்றன. வருமான வரித்துறையினரும் ஆங்காங்கே சோதனை நடத்தி வருகின்றனர்.

நேற்று காலை 9:00 மணி வரை நடந்த சோதனையில், 143.06 கோடி ரூபாய் ரொக்கம்; 5.01 கோடி ரூபாய் மதுபானம்; 93 லட்சம் ரூபாய் மதுபானம்; 121.65 கோடி ரூபாய், தங்கம், வெள்ளி நகைகள்; 32.98 லட்சம் ரூபாய் இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு, 303.63 கோடி ரூபாய்.

எஸ்.திவ்யா

Leave a Reply