முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கவனத்திற்கு!திருவெறும்பூர் தீயணைப்பு வீரர்கள், பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இன்னும் சம்பளம் வழங்கப்படவில்லை!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூரில் புதிய தீயணைப்பு நிலையத்தை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மார்ச் 06-ந் தேதி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரும் கலந்து கொண்டார்.

ஆனால் திருவெறும்பூர் தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றி வரும் வீரர்கள், பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இன்று (02.05.2024) மதியம் வரை சம்பளம் வழங்கப்படவில்லை. அதற்கான உரிய காரணமும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் அங்கு பணியாற்றும் தீயணைப்பு வீரர்கள், பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பொருளாதார ரீதியில் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். இன்று வரும் நாளை வரும் என்று சம்பளத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

திருவெறும்பூர் தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றி வரும் அனைவருக்கும் அவர்களுக்கான ஊதியத்தை உடனே வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனே உத்தரவிட வேண்டும்.

Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040

Leave a Reply