வருமான வரிப்பிடித்தம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் .

வருமானவரி கூடுதல் ஆணையர், TDS சரகம்-3, சென்னை, திரு M அர்ஜுன் மாணிக், அவர்களின் வழிகாட்டுதலின்படி சென்னை வருமானவரித்துறை கூடுதல் ஆணையரகம், வரிப்பிடித்தம்
சரகம் -3, மெட்ராஸ் வர்த்தக சபையுடன் இணைந்து வருமான வரிப்பிடித்தம் குறித்த விழிப்புணர்வு கருதரங்கத்தினை 14-03-2024 (வியாழன்) அன்று  சென்னையில் நடத்தினர்.

திரு கிருஷ்ணன் பரமேஸ்வரன், தலைவர், நேரடி வரி கமிட்டி, மெட்ராஸ் வர்த்தக சபை, வரவேற்புரை ஆற்றினார்.

திரு R ராஜாமனோகர்,  வருமானவரி துணை ஆணையர், வருமானவரி பிடித்தம் வட்டம் 3(1), சென்னை, இந்நிகழ்வுக்கு தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றினார்.

வருமானவரி அலுவலர்கள் திரு L ராஜாராமன், திரு திரு K செந்தில் குமார் மற்றும் திரு T V ஸ்ரீதர், ஆகியோர் வருமானவரி சட்டத்தில் இடம்பெற்றுள்ள வரிப்பிடித்தம் செய்யவேண்டிய பிரிவுகளின் சாராம்சத்தை தெளிவாக விளக்கினார்.  மேலும், வரிப்பிடித்தம் செய்பவர்களின் கடமைகள் மற்றும் அவர்களின் பொறுப்புகளை பட்டியலிட்டனர்.  வரிப்பிடித்தம் விதிகளை சரியாக பின்பற்றவில்லை என்றால் எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்களை எடுத்துரைத்தனர் . 

கீழ்கண்ட விஷயங்களை, வரிப்பிடித்தம் செய்பவர்களுக்கான முக்கிய செய்தியாக  (MESSAGE) வழங்கினார்.

  1. முறையான வருமானவரிப்பிடித்தம்

2. காலக்கெடுக்குள் வரிப்பிடித்தம் செய்த தொகையினை மத்திய அரசின் கணக்கில் செலுத்துதல்

3. சரியான காலாண்டு படிவம்

4. நேரத்தே சான்றிதழ் வழங்குதல்

திருமதி ஜானகி கார்த்திகேயன், வருமானவரி ஆலோசகர், TRACES தளத்தில், வரிப்பிடித்தம் செய்பவர்கள் கையளவேண்டிய நடவடிக்கைகளை தெளிவாக விளக்கினார்.

வரிப்பிடித்தம் செய்பவர்களுக்கான நலன் கருதி, சென்னை தலைமை ஆணையரகம் (வரிப்பிடித்தம்) மேற்கொண்ட கீழ்கண்ட நடவடிக்கைகள், வரிப்பிடித்தம் செய்பவர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

1. வரிப்பிடித்தம் துண்டு பிரசுரம் (ஆங்கிலம் மற்றும் தமிழ்) – மென் நகல் வழங்கப்பட்டது.

2. வரிப்பிடித்தம் கையேடு (ஆங்கிலம் மற்றும் தமிழ்) – மென் நகல் வழங்கப்பட்டது.

3. TRACES தளம் குறித்த காணொலிகள் (தமிழ்) – வருமானவரித்துறையின் அதிகாரப்பூர்வ YOUTUBE சேனல் – @incometaxtamilnaduandpuduc9090 

4. செயற்கை நுண்ணறிவை உபயோகப்படுத்தி உருவாக்கப்பட்ட TDS CHATBOT (TDS நண்பன்) – ஆண்ட்ராய்டு மற்றும் iOS  பயன்பாட்டாளர்களுக்கு உபயோகத்தில் உள்ளது.

நேரடி வரி கமிட்டி, மெட்ராஸ் வர்த்தக சபை  மற்றும் தொழில்துறையின்  இணைத்தலைவர் சுதா அசோக் நன்றியுரை வழங்கினார்

இந்த கருத்தரங்கித்தில்  40க்கும் மேற்பட்ட பல்வேறு தொழில் மற்றும் வணிகம் செய்பவர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

திவாஹர்

Leave a Reply