கேலோ இந்தியா வளர்ந்து வரும் திறமைகளை அடையாளம் காணும் திட்டம் 2036-ம் ஆண்டில் இந்தியாவை விளையாட்டில் சிறந்த 10 நாடுகளுக்குள்ளும் 2047-ம் ஆண்டில் முதல் 5 இடங்களிலும் இடம்பெறச் செய்யும் படிக்கல்லாக இருக்கும்!-அனுராக் சிங் தாக்கூர் .

சண்டிகரில் உள்ள செக்டார் 7 விளையாட்டு வளாகத்தில் மிகுந்த உற்சாகத்துடன் தனித்துவமான கேலோ இந்தியா வளர்ந்து வரும் திறமைகளை அடையாளம் காணும் கீர்த்தி திட்டத்தை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் இன்று தொடங்கி வைத்தார்.

ஒன்பது முதல் 18 வயதுக்குட்பட்ட பள்ளி குழந்தைகளை இலக்காகக் கொண்ட இந்த நாடு தழுவிய திட்டம் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலிருந்தும் திறமையாளர்களைக் கண்டறிவது மற்றும் போதைப்பொருள் மற்றும் பிற கேஜெட்களின் கவனச்சிதறல்களுக்கு அடிமையாவதைத் தடுக்க விளையாட்டை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது  ஆகிய இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டிருக்கும்.

விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்குவதும், ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் போன்ற சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கங்களை வெல்லக்கூடிய திறமையாளர்களை உருவாக்குவதும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் கனவாக கீர்த்தி இருந்தது என்று திரு தாக்கூர் குறிப்பிட்டார்.

கீர்த்தி எனும் இந்தத் திட்டம் நாடு முழுவதும் 50 மையங்களில் தொடங்கப்பட்டது. தடகளம், குத்துச்சண்டை, மல்யுத்தம், ஹாக்கி, கால்பந்து, மல்யுத்தம் உள்ளிட்ட 10 விளையாட்டுகளில் முதல் கட்டமாக 50,000 விண்ணப்பதாரர்கள் மதிப்பீடு செய்யப்படுகிறார்கள். அறிவிக்கப்பட்ட திறன் மதிப்பீட்டு மையங்கள் மூலம் திறமையாளர்களை அடையாளம் காண ஆண்டு முழுவதும் நாடு முழுவதும் 20 லட்சம் மதிப்பீடுகள் நடத்துவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

2036-ம் ஆண்டுக்குள்  விளையாட்டில் உலகின் சிறந்த 10 நாடுகளுக்குள்ளும், 2047-ம் ஆண்டில் முதல் ஐந்து இடங்களிலும் ஒன்றாக மாற நாடு விரும்பும் நேரத்தில் இந்தப் பயிற்சித் திட்டம் இந்தியாவில் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று திரு தாக்கூர் கூறினார்.

இளைஞர்கள் நாட்டின் கட்டுமானத்தின் முக்கியப் படிகள் என்று வலியுறுத்திய திரு தாக்கூர், விளையாட்டில் சாதிக்க வேண்டுமானால் முன்கூட்டியே தொடங்க வேண்டும் என்றார். ஒலிம்பிக் பதக்கம் வெல்ல ஒரு தடகள வீரருக்கு குறைந்தது 10 ஆண்டுகள் தயாரிப்பு தேவை என்று கூறிய அமைச்சர், “கீர்த்தி நாட்டின் ஒவ்வொரு தொகுதியையும் சென்றடைந்து, ஒரு விளையாட்டை விளையாட விரும்பும் ஒருவர், எப்படி விளையாடுவது என்று தெரியாத நிலையில் இருப்பவர்களை  இந்தத் திட்டத்தில் இணைக்க விரும்புகிறது. விளையாட்டை விளையாடும் ஒவ்வொரு குழந்தையும் பதக்கம் வெல்லாது என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் குறைந்தபட்சம் இளைஞர்களை போதைப்பொருள் மற்றும் பிற அடிமையாதல்களிலிருந்து விலக்கி வைக்க விளையாட்டைப் பயன்படுத்த விரும்புகிறோம். மைபாரத் இணையத்தளத்தின் மூலம் பதிவு செய்யுமாறு ஒவ்வொரு குழந்தையையும் நான் கேட்டுக்கொள்கிறேன். பதிவு செய்தவர்களை அணுகி கீர்த்தி மூலம் வாய்ப்பை வழங்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது.

எம்.பிரபாகரன்

Leave a Reply