சீமானுக்கு எதிராக புதியக் கட்சி!-நாம் தமிழர் கட்சியில் பிளவு.

சீமான்.

நாம் தமிழர் கட்சியை உடைக்கச் சதி!-இது சீமானுக்கு சோதனைக் காலம்!-என்றத் தலைப்பில் நமது ‘உள்ளாட்சித்தகவல்’ ஆசிரியர் டாக்டர் துரை பெஞ்சமின் அவர்கள் அவருக்கு கிடைத்தத் தகவலை, கடந்த 24/02/2024 அன்று நமது இணையதளத்தில் வெளியிட்டிருந்தார்.

சஞ்சீவி நாதன் மற்றும் அவரது ஆதரவாளர்கள்.

அந்தச் செய்தி வெளிவந்து இரண்டு வாரங்களுக்குள், நாம் தமிழர் கட்சியின் சிவகங்கை மாவட்ட நிர்வாகி சஞ்சீவி நாதன் என்பவர், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக மிகக் கடுமையான விமர்சனங்களை அக்கினி வார்த்தைகளால் அபிஷேகம் செய்துள்ளார். அத்தோடு இல்லாமல் சீமானுக்கு எதிராக தனிக் கட்சி தொடங்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். அப்படி தொடங்கப்படும் அக்கட்சிக்கு ‘பொதுவுடமை நாம் தமிழர் கட்சி’ என்று பெயர் சூட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது சீமானுக்கு உண்மையிலுமே சோதனைக் காலம் தான்.

கே பி சுகுமார்., B.E., ullatchithagaval@gmail.com

இது தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.

https://www.ullatchithagaval.com/2024/02/24/95717/

Leave a Reply