சட்ட விரோதமாக லாரியில் கடத்தப்பட்ட 1797 கிலோ பீடி இலைகள் பறிமுதல்!-ஒருவர் கைது.

இலங்கை கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, விரைவு அதிரடிப்படையின் உதவியுடன் நீர்கொழும்பு துவா பகுதியில் டிசம்பர் 30 ஆம் தேதி விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்ட இலங்கை கடற்படையினர், அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த லாரி ஒன்றை மறித்து சோதனையிட்டபோது, சட்ட விரோதமாக 58 பொதிகளில் 1797 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் லாரியில் ஏற்றி கடத்தலில் ஈடுப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து அந்த லாரியுடன் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சம்பவத்துடன் தொடர்புடைய 44 வயதுடைய நபர் ஒருவரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அந்த நபர் நீர்கொழும்பு பகுதியில் வசிப்பவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply