வருமானவரிப்பிடித்தம் குறித்த இணைய வழி விழிப்புணர்வு கருத்தரங்கம்.

திரு M அர்ஜுன் மாணிக், வருமானவரி கூடுதல்ஆணையர்,
TDS சரகம்-3, சென்னை அவர்களின் வழிகாட்டுதலில்,   சென்னை வருமானவரித்துறை கூடுதல் ஆணையரகம், வரிப்பிடித்தம்
சரகம்-3,  சென்னை,  மற்றும்  தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான பசுமைத் திட்டம் (TBGPCCR)   இணைந்து, வரிப்பிடித்தம் செய்யும் அலுவலர்களின் நலனுக்காக,  வருமானவரிப்பிடித்தம் குறித்த இணைய வழி விழிப்புணர்வு கருதரங்கத்தினை 03-05-2024 (வெள்ளிக்கிழமை) அன்று  சென்னையில் நடத்தினர்.

திருமதி சுபாஷினி கணபதி, பட்டய கணக்காளர் நிகழ்வை ஒருங்கிணைத்தார். திட்ட இயக்குநர் திரு நாக சதிஷ் வரவேற்புரை வழங்கினார். காடுகளின் தலைமை பாதுகாவலர் திரு பெரியசாமி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

வருமானவரி அலுவலர்கள் திரு L ராஜாராமன், திரு K செந்தில் குமார்  & திரு T V ஸ்ரீதர்   வருமானவரி சட்டத்தில் இடம்பெற்றுள்ள வரிப்பிடித்தம் செய்யவேண்டிய பிரிவுகளின் சாராம்சத்தை தெளிவாக விளக்கினார்.  மேலும், வரிப்பிடித்தம் செய்பவர்களின் கடமைகள் மற்றும் அவர்களின் பொறுப்புகளை பட்டியலிட்டனர்.  வரிப்பிடித்தம் விதிகளை சரியாக பின்பற்றவில்லை என்றால் எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்களையும் எடுத்துரைத்தனர். 

கீழ்கண்ட விஷயங்களை, வரிப்பிடித்தம் செய்பவர்களுக்கான செய்தியாக  (MESSAGE) வழங்கினார்.

1. முறையான வருமானவரிப்பிடித்தம்

2. காலக்கெடுவுக்குள் வரிப்பிடித்தம் செய்த தொகையினை மத்திய அரசின் கணக்கில் செலுத்துதல்

3. சரியான காலாண்டு படிவம்

4. நேரத்தே சான்றிதழ் வழங்குதல்

திருமதி ஜானகி கார்த்திகேயன், வருமானவரி ஆலோசகர், TRACES தளத்தில், வரிப்பிடித்தம் செய்பவர்கள் கையளவேண்டிய நடவடிக்கைகளை தெளிவாக விளக்கினார்.

வரிப்பிடித்தம் செய்பவர்களுக்கான நலன் கருதி, சென்னை தலைமை ஆணையரகம் (வரிப்பிடித்தம்) மேற்கொண்ட கீழ்கண்ட நடவடிக்கைகள், வரிப்பிடித்தம் செய்பவர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

1. வரிப்பிடித்தம் குறித்த துண்டு பிரசுரம் (ஆங்கிலம் மற்றும் தமிழ்) – மென் நகல் வழங்கப்பட்டது.

2. வரிப்பிடித்தம் கையேடு (ஆங்கிலம் மற்றும் தமிழ்) – மென் நகல் வழங்கப்பட்டது.

3. TRACES தளம் குறித்த காணொலிகள் (தமிழ்) – வருமானவரித்துறையின் அதிகாரப்பூர்வ YOUTUBE சேனல் – @incometaxtamilnaduandpuduc9090

4. செயற்கை நுண்ணறிவை உபயோகப்படுத்தி உருவாக்கப்பட்ட TDS CHATBOT (TDS நண்பன்) – ஆண்ட்ராய்டு மற்றும் iOS  பயன்பாட்டாளர்களுக்கு உபயோகத்தில் உள்ளது.

இந்த கருத்தரங்கத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Leave a Reply