பிஐஎஸ்அதிகாரிகள் சோதனையில் போலி ஐஎஸ்ஐ தயாரிப்புகள் பறிமுதல்.

இந்திய தர நிர்ணய அமைவன தெற்கு மண்டல அலுவலக அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பூந்தமல்லி பி.பி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையில் ஐ எஸ் ஐ முத்திரைகளை குடிநீர் பாட்டில்களில் அனுமதியின்றி தவறாகப் பயன்படுத்தியது தெரிய வந்தது. இதன்படி 12000 (1 லி, 2 லி, 500 மில்லி, 300 மில்லி) குடிநீர் பாட்டில்கள் மற்றும் 4 அட்டைப் பெட்டிகளில் ஐஎஸ்ஐ முத்திரை வில்லைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த குற்றத்திற்காக இரண்டு வருட சிறைதண்டனையோ அல்லது 2 லட்சம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும்.

திவாஹர்

Leave a Reply