தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.

தமிழக அரசு. அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவரும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தம் செய்ய தொடர்ந்து கோரிக்கை வைக்கின்றனர். ஆனால் இன்னும் நியாயமில்லை. அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதது

2012 ல் அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் ஆகிய சிறப்பு பாடங்களில் மாணவர்களுக்கு கற்றுத்தர ஆசிரியர்கள் மாதம் 5 ஆயிரம் ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்டார்கள்.

இவர்களுக்கு 2014 ல் 2 ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு, 2017 ல் 700 ரூபாய் சம்பள உயர்வு, 2021 ல் ரூ. 2,300 சம்பள உயர்வு வழங்கப்பட்டு இப்போது மாதம் 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். இன்றையக் காலக்கட்டத்தில் இந்த ஊதியம் போதுமானதல்ல.

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வாக்குறுதி அளித்தது. ஆட்சிக்கு வந்து 19 மாதங்கள் கடந்தும் இன்னும் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யவில்லை, அவர்களுக்கு சம்பள உயர்வும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில் பொங்கல் பண்டிகை வர இருப்பதால் பகுதிநேர ஆசிரியர்கள், தங்களுக்கு பொங்கல் போனஸ் மற்றும் பண்டிகை முன்பணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

எனவே தமிழக அரசு, பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகளான பணிநிரந்தரம், சம்பள உயர்வு, பொங்கல் போனஸ், பண்டிகை முன்பணம் ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply