ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் நெய் விலை உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே.வாசன் அறிக்கை.

ஒரிரு மாதங்களுக்கு முன்னர், ஏழை, எளிய மக்கள் தமிழக அரசு ஓரிரு அன்றாடம் பயன்படுத்தும் பால் விலையையும், பால் பொருள்களின் விலையையும் உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றியது.

இந்த மாதமும், வருகிற மாதமும் பண்டிகைகால மாதம் ஆகும். இக்காலங்களில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் அதிகமாக பயன்படுத்தும் நெய் விலையை அரசு உயர்த்தி மக்கள் மீது மேலும் சுமையை ஏற்றியிருக்கிறது. பண்டிகை காலங்களில் மக்கள் நெய்யை அதிகம் பயன்படுத்துவார்கள் என்று தெரிந்தே அவற்றின் விலையை உயர்த்தி இருப்பது, தமிழக அரசு, மக்களின் நலனில் அக்கரையில்லாமல், வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுவது நிதர்சனமாக தெரிகிறது.

அடுத்த மாதம் தமிழர்களின் பண்டிகையான #பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு வருடாந்தோறும் வழங்க கூடிய பொங்கல் தொகுப்பை தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும். இவற்றிற்கான பொருள்களை விவசாயிகளிடம் இருந்து கரும்பு மற்றும் வெல்லம், பருப்பு வகைகளை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

மேலும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெரும் வகையில் ஐந்தாயிரம் மதிப்புள்ள தரமான பொங்கல் தொகுப்பை அரசு வழங்க வேண்டும். அதோடு மக்களை நேரடியாக பாதிக்கும் நெய் விலை உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply