2022-ஆம் ஆண்டின் சர்வதேச சுகாதார பாதுகாப்பு முறைமைகள்தினத்தில், தேசிய சுகாதார அமைச்சர்களின் 2 நாள் மாநாடு வாரணாசியில் இன்று நிறைவு.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் இன்று நடைபெற்ற சுகாதார அமைச்சர்கள் மாநாட்டின் நிறைவு விழாவில் உரையாற்றினர்.

2022 ஆம் ஆண்டின் சர்வதேச சுகாதார பாதுகாப்பு  தினத்தை முன்னிட்டு இந்த மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்வின் கருப்பொருள் “நாம் விரும்பும் உலகை உருவாக்குங்கள்: அனைவருக்கும் ஆரோக்கியமான எதிர்காலம்” ஆகும். ஜார்க்கண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திரு பன்னா குப்தா, சிக்கிம் மாநில  சுகாதாரத்துறை அமைச்சர் திரு எம் கே ஷர்மா, உத்தரகாண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திரு தன் சிங் ராவத் மற்றும் சிக்கிம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சபன் ராஜன் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கொவிட் தொற்றுநோயை கட்டுப்படுத்தியதில்  இந்தியாவின் வெற்றியை எடுத்துரைத்த திரு ஆதித்யநாத், கொவிட் மேலாண்மை மற்றும் தடுப்பூசிக்கு இந்தியா உலகிற்கு ஒரு முன்மாதிரியாக திறன்பட செயல்பட்டது என்றார். “உலக அளவில், பல்வேறு நாடுகள் விதித்த கட்டுப்பாடுகளுக்கு எதிராக உலகெங்கிலும் உள்ள மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தாலும், இந்தியாவில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், கோவிட் வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகள் 140 கோடி மக்களால் சிறப்பாக பின்பற்றப்பட்டன” என்றும் அவர் கூறினார். இந்தியா தனது சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை விரைந்து சீரமைக்க தொற்றுநோயை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டதாக அவர் கூறினார்.

தரமான தடுப்பூசிகளை இந்தியா தயாரித்துள்ளது.  அதன் செயல்திறன் உலகம் முழுவதும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் எடுத்துரைத்தார்.

திவாஹர்

Leave a Reply