இலங்கை கடற்பரப்பில் 4000 கிலோ பீடி இலைகளுடன் 8 இந்தியர்கள் கைது!-2 படகுகள் பறிமுதல்.

இலங்கை கடற்பரப்பில் வடமேற்கு பகுதியில் குதிரைமலை முனையிலிருந்து மேற்கொள்ளப்பட்ட கடற்படை ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட 4000 கிலோவுக்கும் அதிகமான பீடி (Kendu Leaves) இலைகளை கடத்தி சென்ற 02 இந்திய மீன்பிடி படகுகள் தடுத்து நிறுத்தப்பட்டன. இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்ட 08 இந்திய பிரஜைகளையும், பெருமளவிலான கடத்தல் பொருட்களுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் டிசம்பர் 05 ஆம் தேதி இரவு நடந்துள்ளது.

–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply