விவசாயிகளுக்கு 100 சதவீத காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை கிடைக்க அரசு துணை நிற்க வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.

வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே சம்பா சாகுபடி செய்யும் நிலையில் தான் விவசாயிகள் உள்ளனர் .

அதற்கும் பல சிரமங்களை சந்திக்கின்றனர் .

வரலாறு காணாத கன மழையால் தற்போது நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் , அவசர கால நிவாரணத்தை தமிழக அரசு கொடுத்தால் மட்டுமே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்க முடியும் .

உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் . குடும்ப அட்டைக்கு ரூ .1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இதுவரை வழங்கப்படவில்லை .

தற்போது குடும்ப அட்டைக்கு ரூ .5 ஆயிரம் கேட்கக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது . வெள்ள சேதங்கள் குறித்தும் இதுவரை கணக்கீடு செய்யப்படவில்லை . விவசாயிகளுக்கு 100 சதவீத காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை கிடைக்க அரசு துணை நிற்க வேண்டும்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply