தமிழக அரசு பால் விலையை உயர்த்தியதைக் கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சென்னையில் வரும் 24 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்.

தமிழக அரசு பால்விலையை உயர்த்தியதைக் கண்டித்தும் , உயர்த்திய பால்விலையைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் த.மா.கா சார்பில் சென்னையில் வரும் 24 ஆம் தேதி அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .

இந்த ஆர்ப்பாட்டம் 24.11.2022 வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் சென்னை , ராஜாஜி சாலை , மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் த.மா.கா வின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்தின் சார்பில் நடைபெறுகிறது .

அதாவது தமிழக அரசு ஆரஞ்ச் நிற பாக்கெட் பால் விலையை உயர்த்தியது . இதனால் பொது மக்கள் குறிப்பாக சாதாரண நடுத்தர மக்களும் , அவ்வப்போது ஆரஞ்ச் நிற பாக்கெட் பாலை வாங்க நேரிடும் ஏழை , எளிய மக்களும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் .

எனவே எனது தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட த.மா.கா தலைவர்களும் , மாநில மாவட்ட நிர்வாகிகளும் , துணை அமைப்பினரும் மற்றும் தொண்டர்களும் கலந்து கொண்டு தமிழக அரசை பால் விலையைக் குறைக்க வற்புறுத்துகிறோம் என்பதை த.மா.கா சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன் .

கே.பி.சுகுமார்

Leave a Reply