கூட்டுறவு துறையில் விரைவில் 6,500 புதிய ஊழியர்கள் நியமனம்: அமைச்சர் ஐ.பெரியசாமி.

கூட்டுறவு துறையில் விரைவில் 6500 புதிய ஊழியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் கூட்டுறவு துறை சார்பில் 69வது கூட்டுறவு வார விழா நேற்று நடந்தது. இதில் 3,586 பயனாளிகளுக்கு ரூ.30.87 கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கேஆர்.பெரியகருப்பன் வழங்கினர். இதனை தொடர்ந்து அமைச்சர் ஐ.பெரியசாமி, நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் முதல்வர்களுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply