கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் மயிலாடுதுறை, கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வல்லம்படுக்கை கிராமத்தில் சுமார் 500 நபர்களுக்கு வேட்டி, சேலை, போர்வை, அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. அப்போது பல்வேறு கோரிக்கைகளை எடப்பாடி பழனிசாமியிடம் விவசாயிகள் வைத்தனர். அவர்கள் மத்தியில் பேசிய அவர், விவசாயிகளுக்காக அதிமுக எப்போதும் குரல் கொடுக்கும் என்று உறுதியளித்தார்.

எஸ்.திவ்யா

Leave a Reply