இலங்கை கடல் பகுதியில் ரூ.10 கோடி மதிப்புள்ள கேரளா கஞ்சா பறிமுதல்! -2 நபர்கள் கைது.

இலங்கை. யாழ்ப்பாணம் டெல்ஃப்ட் தீவின் தென்கிழக்கே உள்ள கடல் பகுதியில் ரூ.10 கோடி மதிப்புள்ள கேரள கஞ்சாவை இலங்கை. கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்து இது சம்மந்தமாக 2 நபர்களை கைது செய்துள்ளனர். கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட நபர்கள் மண்டைதீவு மற்றும் நாச்சிக்குடா பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கேராளாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்தப்படும் கேரளா கஞ்சாவுக்கு இலங்கையில் மிக பெரிய வரவேற்பும், கூடுதல் விலையும் கிடைப்பதால் இந்த கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply