அனைத்து சர்க்கரை ஆலைகளுக்கும் 60 லட்சம் மெட்ரிக் டன் ஏற்றுமதி ஒதுக்கீட்டை அரசு நிர்ணயித்துள்ளது.

கரும்பு உற்பத்தியின் ஆரம்ப மதிப்பீடுகளின் அடிப்படையில், நாட்டிலுள்ள சர்க்கரையின் விலை நிலைத்தன்மையையும், நாட்டில் உள்ள சர்க்கரை ஆலைகளின் நிதி நிலையையும் சமநிலைப்படுத்தும் மற்றொரு நடவடிக்கையாக, 2022-23 சர்க்கரைப் பருவத்தில் 60 லட்சம் மெட்ரிக் டன் வரை சர்க்கரை ஏற்றுமதியை இந்திய அரசு அனுமதித்துள்ளது. . சர்க்கரை ஏற்றுமதியை ‘கட்டுப்படுத்தப்பட்ட’ பிரிவின் கீழ் சேர்ப்பதை 2023 அக்டோபர் 31 வரை  வெளிநாட்டு வர்த்தகத்துக்கான தலைமை இயக்ககம் ஏற்கனவே நீட்டித்துள்ளது.

30.09.2023 நிலவரப்படி, சுமார் 275 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரையை உள்நாட்டு உபயோகத்திற்காகவும், 50 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரையை எத்தனால் உற்பத்திக்குத் திருப்பிவிடவும், 30.09.2023 நிலவரப்படி, மத்திய அரசு முன்னுரிமை அளித்துள்ளது. நாட்டில் உள்ள சர்க்கரை ஆலைகள் உற்பத்தி செய்யும் சர்க்கரையின் இருப்பு அளவு ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படும். 2022-23 சர்க்கரைப் பருவத்தின் தொடக்கத்தில், கரும்பு உற்பத்தியின் ஆரம்ப மதிப்பீடுகளின்படி,60 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கரும்பு உற்பத்தி அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்படும் மற்றும் சமீபத்திய மதிப்பீடுகளின் அடிப்படையில், அனுமதிக்கப்படும் சர்க்கரை ஏற்றுமதியின் அளவு மறுபரிசீலனை செய்யப்படும்.

2021-22 சர்க்கரை பருவத்தின் போது, இந்தியா 110 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்து, உலகின் இரண்டாவது பெரிய சர்க்கரை ஏற்றுமதியாளராக ஆனது. இதன்மூலம், சுமார் ரூ. 40,000 கோடி மதிப்புள்ள அந்நியச் செலாவணி நாட்டுக்கு கிடைத்தது.  சர்க்கரை ஆலைகளுக்கு உரிய நேரத்தில் பணம் செலுத்தியதாலும், இருப்புச் செலவு குறைந்ததாலும் விவசாயிகளின் கரும்பு நிலுவைத் தொகையை முன்கூட்டியே வசூலிக்க முடிந்தது. 31.10.2022 நிலவரப்படி, 1.18 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கரும்பு கொள்முதல் செய்யப்பட்டிருந்தாலும்,  2021-22 பருவத்துக்கான விவசாயிகளின் கரும்பு நிலுவைத் தொகையில் 96% க்கும் அதிகமானவை ஏற்கனவே வசூலிக்கப்பட்டுள்ளன.

சர்க்கரை ஏற்றுமதி கொள்கையானது, உள்நாட்டு நுகர்வோரின் நலன் கருதி சர்க்கரைத் துறையில் விலை ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் அரசு கவனம் செலுத்துவதைக் குறிக்கிறது. சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவதன் மூலம், உள்நாட்டு விலைகள் கட்டுக்குள் இருக்கும். மேலும், உள்நாட்டு சந்தையில் பெரிய பணவீக்க போக்குகள் எதுவும் ஏற்படாது. இந்திய சர்க்கரை சந்தை ஏற்கனவே பெயரளவுக்கு விலை உயர்வைக் கண்டுள்ளது, இது விவசாயிகளுக்கான கரும்புக்கான ஆலை மறுநிர்ணய உற்பத்தி அதிகரிப்புடன் ஒத்துப்போகிறது.

மற்றொரு கவனம் செலுத்தும் பகுதி, நாட்டில் எத்தனால் உற்பத்தியாகும். இது எரிபொருள் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும், பசுமை ஆற்றலை நோக்கிச் செல்வதற்கும்  முன்னுரிமை அளிக்கிறது.

சர்க்கரை ஏற்றுமதியை அனுமதிப்பதன் மூலம், கரும்பு விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலைகளின் நலனையும் அரசு பாதுகாத்துள்ளது, ஏனெனில் ஆலைகள் சாதகமான சர்வதேச சர்க்கரை விலை சூழ்நிலையின் பலனைப் பெற முடியும் என்பதுடன் சர்க்கரையின் சிறந்த விலையை அடைய முடியும், இதனால் நடப்பு சர்க்கரை பருவத்தில் 2022-23 விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகை சரியான நேரத்தில் செலுத்தப்படலாம்.ஆலைகளின் செயல்பாட்டு மூலதனச் செலவுகள், சர்க்கரை இருப்புகளின் உகந்த நிலை காரணமாக குறையக்கூடும்.

எம்.பிரபாகரன்

Leave a Reply